வங்கியில் வாடிக்கையாளர்கள் 1000 ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தடை.
பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து 1000 ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தடையை நீட்டித்துள்ளது குறிப்பிட்ட ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகள், வருமானம் ஈட்டுவதற்கு வழியில்லாத வங்கிகள் மற்றும் போதிய மூலதனம் இல்லாத வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளையும், தடையையும் அமல்படுத்தி வருகிறது.
மே 19ஆம் தேதியுடன் ரிசர்வ் வங்கியின் தடை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தடையை மேலும் நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவு வெளியிட்டுள்ளது. இதன்படி, வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் என்னென்ன தடைகள்